Saturday, August 6, 2022 - 9:14am
குரங்கம்மை தொற்றுக்கு முகம் கொடுக்க இலங்கை தயாராகவுள்ளதாக தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு பிரதானி விசேட வைத்தியர் சமித கினிகே இதனைத் தெரிவித்துள்ளார்.
குரங்கம்மை தொற்று நாட்டில் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இதுவரை நாட்டில் குரங்கம்மை தொற்றுக்குள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add new comment