ஜூலை 21 வியாழக்கிழமை மின்வெட்டு: 2 கட்டங்களில் 3 மணித்தியாலங்கள்

இன்று வியாழக்கிழமை (21) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில், பி.ப. 1.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 3 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகர வர்த்தக வலயத்திற்கு (CC) காலை 6.00 மணி முதல் மு.ப. 8.30 மணி வரையில் 2 ½ மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

முதலீட்டு வர்த்தக சபை (BOI) கைத்தொழில் வலயங்களுக்கு காலை 5.30 மணி முதல் மு.ப. 8.30 மணி வரையில் 3 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

அதற்கமைய, நாட்டை 27 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | M,N,O | X,Y,Z | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,

ஜூலை 21 : 2 கட்டங்களில் 3 மணித்தியாலங்கள்

ABCDEFGHIJKL | PQRSTUVW : 
 - பி.ப. 1.00 - பி.ப. 6.00 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்
 - பி.ப. 6.00 - பி.ப. 10.00 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

MNO | XYZ : 
 - மு.ப. 5.30 - பி.ப. 8.30 வரை 3 மணித்தியாலங்கள்

CC : 
 - மு.ப. 6.00 - பி.ப. 8.30 வரை 2½ மணித்தியாலங்கள்

மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

<<மின்வெட்டு அட்டவணை ஜூலை 21.pdf>> 
<<பிரதேசங்கள்.pdf>>
(மின்வெட்டு பிரதேச பட்டியல் விரைவில் இணைக்கப்படும்)

PDF File: 

Add new comment

Or log in with...