- சபாநாயகர் மஹிந்த யாபா அறிவிப்பு
- மேல் மாகாணத்தில் ஊரடங்கிற்கு உத்தரவு
- அமைதியற்று செயற்படுவோரை கைது செய்யவும் உத்தரவு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதால், அரசியலமைப்பின் 31/1 சரத்திற்கு அமைய, ஜனாதிபதியினால் பதில் ஜனாதிபதியாக, ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதால் அரசியலமைப்புக்கு அமைய, ஜனாதிபதியினால் பதில் ஜனாதிபதியாக, ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் - சபாநாயகர் மஹிந்த யாபா#SriLankaCrisis #ProtestLK #PoliticalCrisisLK #EconomicCrisisLK #SriLanka #LKA #SLhttps://t.co/P5NBElQiod
— Rizwan Segu Mohideen (@RizwanStWEET) July 13, 2022
இந்நிலையில், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தவும், அமைதியற்று நடந்துகொள்வோரை கைது செய்யுமாறும், அவர்கள் பயணிக்கும் வாகனங்களை கைப்பற்றுமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக மேல் மாகாணத்தில் ஊரடங்கு அமுல்படுத்தவும், அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தவும், அமைதியற்று நடந்துகொள்வோரையும் அவர்கள் பயணிக்கும் வாகனங்களையும் கைது செய்யுமாறும் பிரதமர் ரணில் பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவு#SriLankaCrisis #SriLanka #LKA #SLhttps://t.co/K6RpEeBm5d
— Rizwan Segu Mohideen (@RizwanStWEET) July 13, 2022
இதேவேளை, துப்பாக்கிகளுடனான ஹெலிகொப்டர்கள் காலி முகத்திடல் 'கோட்டா கோ கம' போராட்டக்களம் மற்றும் கொழும்பு 07 பிளவர் வீதியிலுள்ள பிரதமரின் அலுவலகம் ஆகியவற்றிற்கு அருகில் தாழ்வாக பறப்பதனை அவதானிக்கக் கூடியதாக உள்ளதாக எமது நிருபர் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் அலுவலகத்திற்கு பல அடுக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதனையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
There is 1 Comment
பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணிலை ஜனாதிபதி நியமித்துள்ளார்.
Add new comment