'வரலாற்றில் கிருஷ்ணகிரி மாவட்டம்' - நூல் வெளியீடு

நடிகர் பொன்வண்ணன் வெளியிட்டு வைத்தார்

தமிழ்நாடு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஹோஸ்டியா வளாகத்தில், இனிய நந்தவனம் பதிப்பகம் தயாரித்த அறம்கிருஷ்ணன் அவர்களின் 'வரலாற்றில் கிருஷ்ணகிரி மாவட்டம்' என்ற வரலாற்று நூல் 10.07.22 அன்று வெளியிடப்பட்டது. தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் (முன்னாள் தொல்லியல் துறை துணை இயக்குநர்_பணி ஓய்வு) தலைமையில் நடைபெற்ற விழாவில் திரைக்கலைஞர், ஓவியர் மற்றும் நடிகரான பொன்வண்ணன் நூலை வெளியிட, கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுத் தலைவர் கோமகன் நூலைப் பெற்றுக் கொண்டார்.

பாவலர் அறிவுமதி நூலை வெளியிட ஓ.சூர். பி. எம் டெக் தலைவர் குமார் பெற்றுக் கொண்டார். இராகவன் நூலை வெளியிட குகன் ஹீரா பெற்றுக் கொண்டனர்.

இந்த விழாவில் வணங்காமுடி, வேல்முருகன், ஹோஸ்டியா தலைவர் குப்புசாமி, நந்தவனம் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

பூங்குன்றன், கோமகன், அறிவுமதி, கிருஷ்ணகிரி ஆட்சியர் கோவிந்தராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். நடிகர் பொன்வண்ணன் சிறப்புரையாற்றும் போது அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஏற்புரை நிகழ்த்திய Rtn அறம்கிருஷ்ணன் பேசும் போது, கடந்த எட்டு ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் தான் மேற்கொண்ட களப்பயணங்கள் பற்றி விரிவாக பேசினார்.

வரலாற்றைப் பாதுகாக்கும் வகையில் ஆறு கோயில்களை புனரமைத்து வருவது, பாடசாலை மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளை கொண்டு மரபு நடைகளை நடத்தியது, சிதைந்து போன வரலாற்றுத் தடயங்களை ஊர் மக்களின் உதவி கொண்டு பாதுகாப்பை ஏற்படுத்தியது போன்ற பல்வேறு செய்திகளை பற்றி அவர் பேசினார்

இந்த நிகழ்வில் ஓசூரை சேர்ந்த சுவாதி சரவணன், ஓசூர் மக்கள் சங்க தலைவர் ஸ்ரீதர் பரிமளம், பள்ளி தாளாளர் ​ெடாக்டர் சண்முகவேல,ஜெகநாதன், Rtn தர்மேஷ் பட்டேல் PDG, ஓடிட்டர் ராகவன், அரிமா ரவிவர்மா ஆகியார் கலந்து கொண்டனர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த வரலாற்றுக் குழுக்களை சேர்ந்த நண்பர்களும், ஓசூர் அறம் இலக்கிய அமைப்பு, அறம் வரலாற்று ஆய்வு மையம், ஓசூர் எலைட் ரோட்டரி சங்கம் ஆகியவற்றைச் சேர்ந்த நண்பர்களும் விழாவில் கலந்து கொண்டனர்.

வரவேற்புரையை அ.க. இராசு வழங்க,தொகுப்புரையை மு. பாலாஜி மற்றும் திருமதி மணிமேகலை ஆகியோர் வழங்கினர். மா.முருகுகுமரன் நன்றியுரை வழங்கினர்

விழாக் குழுவினர்களான கருமலைத் தமிழாழன், சிவந்தி அருணாசலம், பிரியன், கணபதி, மஞ்சுநாத், வே சிவக்குமார், காமராஜ், செம்பரிதி, சத்திய மூர்த்தி, சாய்ராம், ராஜேஷ், சங்கர் பாபு, வெங்டாசலபதி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த பத்து தொலைக்காட்சி நண்பர்களுக்கும்,பத்து பத்திரிகை நண்பர்களுக்கும் நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Rtn அறம்கிருஷ்ணன்
(நூல் ஆசிரியர், தலைவர் ஓசூர்
அறம் வரலாற்று ஆய்வு மையம்)


Add new comment

Or log in with...