மேலும் சிலரை தேடி இராணுவம், பொலிஸ் வேட்டை
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தகவல்
கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் தப்பிச்சென்ற கைதிகளில் 598 பேர் மீண்டும் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
அதுதொடர்பில் நேற்று அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
700 க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் நேற்று முன்தினம் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்திலிருந்து தப்பிச்சென்றனர். அவர்களில் 598 பேர் பொலிஸாரிடம் சரணடைந்ததுடன் மேலும் நூற்றுக்குமதிகமானோரை தேடிக்கண்டுபிடித்து கைதுசெய்யும் நடவடிக்கைகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டார். பொலிஸாரிடம் சரணடைந்துள்ள 261 பேர் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் ஏனையவர்களை இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஏற்பட்ட குழப்பகரமான நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
Add new comment