வரிசையில் நின்றவர் லொறி மோதி பலி

எரிபொருள் வரிசையில் நின்ற மற்றுமொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரண்டு பிள்ளைகளின் தந்தையான அவர் லொறியொன்றில் மோதுண்டு நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் அளுத்கம தர்காநகர் புவக்வத்தை பிரதேசத்தை வசிப்பிடமாகக்கொண்ட 53 வயதான சிங்கப்புலி ஹேவகே ஆனந்த என்ற இரு பிள்ளைகளின் தந்தையே மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பேருவளை , தர்காநகர் எரிபொருள் நிலையமொன்றில் மற்றுமொரு நபரின் லொறி ஒன்றுக்காக டீசல் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்துநின்ற இவர், நேற்றுமுன்தினம் இரவு 11.20 மணியளவில் வீதியைக் கடக்க முற்பட்டபோது டிப்பர் வண்டியில் மோதியுள்ளார்.

அதே எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள காத்திருந்த டிப்பர் சாரதி அளுத்கம பகுதிக்கு இரவு உணவுக்காக சென்று மீண்டும் அதே இடத்தை நோக்கி வரும்போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அளுத்கம பகுதியிலிருந்து மத்துகம நோக்கி பயணித்த லொறியே இவ்வாறு அவர் மீது மோதியதால் சீனவத்த ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக டிப்பர் சாரதியை அளுத்கம பொலிஸார் கைதுசெய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் மரணித்தவரின் சடலம் அளுத்கம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய சாரதி தப்பிச்சென்று நேற்றுக்காலை பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

லோரன்ஸ் செல்வநாயகம், பேருவளை விசேட நிருபர் பீ.எம். முக்தார்


Add new comment

Or log in with...