Tuesday, June 28, 2022 - 10:44am
புளட் அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான காரைதீவைச் சேர்ந்த அமரர் மகாதேவன் சிவனேசனின் ஒரு வருட ஞாபகார்த்தமாக நடைபெற்ற அணிக்கு ஆறு பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டியில் வீரமுனை விஷ்ணு அணி காரைதீவு ஜொலி கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாடி வெற்றி வாகை சூடியது.
அதற்கான வெற்றிக்கிண்ணத்தை யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் வழங்கி வைத்தார்.
(காரைதீவு குறூப் நிருபர்)
Add new comment