Monday, June 27, 2022 - 2:02pm
நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து கொலை, கொலை முயற்சி மற்றும் பயங்கரவாத செயலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 42 வயதான ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை காலை இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதோடு மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனை இஸ்லாமியவாத பயங்கரவாதச் செயல் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதல்தாரி சில நிமிடங்களில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நோர்வே நட்டவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Add new comment