வைத்தியசாலைக்குச் சென்ற DS; ஊழியர்களால் தடுத்துவைப்பு!

மருத்துவ சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாத்தறை பிரதேச செயலாளரை, வைத்தியசாலை ஊழியர்கள் தடுத்து வைத்த சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் (25) இடம்பெற்றுள்ளது.

சிகிச்சைக்காக சென்ற இவரை சத்திரசிகிச்சை அறைக்குள் ஊழியர்கள் தடுத்து வைத்து தமது ஆட்சேபனையை தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலை ஊழியர்களுக்கு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கான அனுமதிப்பத்திரங்களை பிரதேச செயலாளர் வழங்காமையால் அவர்  வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மாத்தறை பொலிஸாரின் தலையீட்டில் பிரதேச செயலாளர் வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாத்தறை தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...