நாட்டில் மேற்கொள்ளப்படாத பல வணிக வளங்கள் உள்ளன

கொரோனா தொற்றால் உலகில் பல தொழில்கள் பின்னடைவை சந்திக்கும் போது..சில தொழில்முனைவோர் தங்கள் சொந்த தொழிலில் கூட புதிய முதலீடுகளை செய்ய தயங்கும்போது...கொரோனா காலத்தில், வணிக உலகில் புதிய திசைகளைத் தேடி, புதிய வணிகக் கருத்துக்கள் மூலம் புதிய முதலீடுகளைச் செய்த ஒரு அற்புதமான தொழில்முனைவோரை நாங்கள் சமீபத்தில் சந்தித்தோம் ... அவர் பெயர் ஷான் மீமனகே.

கெபுங்கொட, ஜா-எல பமுனுகம வீதியில் உள்ள Resort Ceylon Dutch Trails எனும் அவரது அற்புதமான உணவகத்தில் இந்த உரையாடலைத் தொடங்கினோம். முத்துராஜவெல எல்லையில் அமைந்துள்ள இந்த அழகிய இடம், இயற்கை எழில் கொஞ்சும் சூழல், உள்ளூர் சுவையான உணவுகள் மற்றும் பல்வேறு வித்தியாசமான வழிகளில் சமைக்கப்படும் மீன் உணவுகள் ஆகியவற்றுடன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகும்.

"நான் ஒரு தொழிலதிபர் என்று அழைக்கப்படுவதை விட ஒரு தொழிலாளி என்று அழைக்கப்படுவதையே விரும்புகிறேன்." இன்று நான் பல தொழில்களில் ஈடுபட்டுள்ளேன். இந்த நாட்டில் பயன்படுத்தப்படாத வணிக வளங்கள் நிறைய உள்ளன என்று நான் நினைக்கிறேன்... அந்த வளங்களை நாம் அடையாளம் காண வேண்டும்.... இலங்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு அந்த வளங்களை அடையாளம் காண்பது அவசியமாகும். Divron Bioventures pvt Ltd எனது முக்கிய வணிகங்களில் ஒன்றாகும். உலகின் மிகப்பெரிய இனமான இறால்களை இனப்பெருக்கம் செய்தல்.... எங்கள் குஞ்சு பொரிப்பகங்களில் இறால் வளர்க்கப்பட்டு ஏரிகளில் விடப்பட்டு மீனவர்களிடம் இருந்து வாங்குகிறோம். அந்த நிறுவனத்தை 2013-ல் ஆரம்பித்தோம்.

அதற்கு முன் எங்கள் குளங்களைச் சுற்றி சிப்பி ஓடுகள் வளர்ந்திருந்தன... எனது மற்றொரு நிறுவனமான டிராபிகல் ஷெல்ஃபிஷ் மூலம் மட்டி வளர்க்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதன் மூலம் நமது நாட்டுக்கு டொலர்களை கொண்டு வர முடிந்தது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் இந்த உணவுகளை அறிமுகப்படுத்தி அதன் பலனைப் பெற்றோம். ஒரு வணிகத்தை நடத்தும் போது, ​​அதன் பல்வேறு நோக்கங்களுக்காக செயல்பாட்டு மூலதனம் தேவைப்பட்டது. இதுபோன்ற வணிகத் தேவைகள் ஏற்படும் ஒவ்வொரு முறையும், எனது நிதிப் பங்காளியாக HNB FINANCEஐத் தொடர்பு கொண்டேன்... வாடிக்கையாளருக்கு அவர்கள் வழங்கும் சேவை மிகவும் ஈர்க்கக்கூடியது.... குறிப்பாக வாடிக்கையாளர்களின் நிதித் தேவைகள், கடன்களை வழங்குதல் மற்றும் தீர்வுகளை வழங்குதில் HNB FINANCE முதலிடத்தில் உள்ளது... எனக்கு முதலாவது வெளிநாட்டு ஓடர் ஒன்று கிடைத்த போது தான் நான் HNB FINANCE நிறுவனத்திடமிருந்து 50 லட்சம்  ரூபா கடனாகப் பெற்றுக் கொண்டேன்.... தொழில்முனைவோராகிய நமக்கு மிகக் குறைந்த நேரமே உள்ளது. எனவே ஒரு நிதி நிறுவனத்திடம் இருந்து நாம் எதிர்பார்ப்பது செயல்திறன் மற்றும் எந்த இடையூறும் இன்றி நமது வணிகத்தை முன்னேற்றம் செய்யும் திறன். உங்களது அனைத்து நிதித் தேவைகளையும் பூர்த்தி செய்ய HNB FINANCE சிறந்த இடம் என்பதை யாரிடமும் சொல்ல நான் பயப்படவில்லை, ஏனெனில் HNB FINANCE நாங்கள் எதிர்பார்க்கும் சேவையை வழங்கும்.


Add new comment

Or log in with...