Thursday, June 23, 2022 - 6:00am
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஐ.ம.ச. பெண்கள் பிரிவின் தலைவியுமான ஹிருணிகா பிரேமச்சந்திர தலைமையில், கொழும்பு பிளவர் வீதியில் உள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு முன்பாக நேற்று (22) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ராஜபக்ஷக்களை பாதுகாப்பதற்காகவே ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்றுள்ளதாகவும், நாட்டின் பிரச்சினைகளை பிரதமரால் தீர்க்க முடியாது போயுள்ளதாகவும் தெரிவித்து அந்த குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டுக்குச் செல்லும் வீதியில் பொலிஸாரால் தடையேற்படுத்தி பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
Add new comment