Tuesday, May 17, 2022 - 9:42am
'கோட்டா கோ கம' மற்றும் 'மைனா கோ கம' போராட்டக் களங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அமல் சில்வா மற்றும் மொரட்டுவை நகரசபை ஊழியர் ஒருவர் CID யினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 09ஆம் திகதி அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, 'கோட்டா கோ கம' மற்றும் 'மைனா கோ கம' போராட்டக் களங்கள் மீது தாக்குதல்கள் விளைவித்த சம்பவம் தொடர்பில் அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகநபர்ககள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
Add new comment