Tuesday, April 19, 2022 - 1:54pm
- குறைந்தபட்ச கட்டணம் ரூ. 20 இலிருந்து ரூ. 27
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இன்று (19) நள்ளிரவு முதல் பஸ் கட்டணத்தை 35% ஆக அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, குறைந்தபட்ச கட்டணம் ரூ. 27 ஆக அதிகரிக்கப்படுவதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, தனியார் மற்றும் இ.போ.ச. பஸ் கட்டணங்களை 35% இனால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
Add new comment