- அக்கட்சியின் பியங்கர ஜயரத்னவின் இராஜினாமாவை ஜனாதிபதி நிராகரிப்பு
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக பதவியேறுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
குறித்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார, சேதனப் பசளை உற்பத்தி, மேம்பாடு மற்றும் விநியோக ஒழுங்குறுத்தல், நெல் மற்றும் தானியங்கள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்திகள் மற்றும் உயர் தொழிநுட்பம், கமத்தொழில் இராஜாங்க அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
அவர் இன்று, (11) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டார்.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன, பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக சமர்ப்பித்த கடிதத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.
அதன்படி, பியங்கர ஜயரத்ன தொடர்ந்தும் குறித்த இராஜாங்க அமைச்சுப் பதவியில் செயற்படுவார்.
Add new comment