Thursday, March 31, 2022 - 2:12pm
உயர் நாணயமாற்று விகிதங்களை வழங்குவதாக பொதுமக்களிடமிருந்து வந்த முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு, Presanna Money Exchange (Pvt) Ltd எனும் நிறுவனத்தின் நாணயமாற்று அனுமதிப்பத்திரத்தை இடைநிறுத்தியுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதற்கமைய இன்று (31) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நிறுவனம், அங்கீகரிக்கப்பட்ட நாணயமாற்று நிறுவனமாக செயற்பட முடியாது என பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுவதாக, இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
PDF File:
Add new comment