2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு

2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு-2021 Grade 5 Scholarship Exam District Cut Off Marks

- விண்ணப்பித்த 340,626 பேரில் 335,128 பேர் தோற்றம்
- விசேட தேவையுடைய 250 பேர் உள்ளிட்ட 20,000 பேருக்கு புலமைப்பரிசில்
- மார்ச் 31 வரை மீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்கலாம்

தற்போது வெளியாகியுள்ள 2021, தரம் 5புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

குறித்த பரீட்சை இவ்வருடம் ஜனவரி 22ஆம் திகதி இடம்பெற்றிருந்த நிலையில், நேற்று (13) அதன் பெறுபேறுகள் இணையத்தில் வெளியிடப்பட்டன.

2021 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு விண்ணப்பித்த 340,626 பேரில் 335,128 பேர் தோற்றியிருந்ததாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, விசேட தேவையுடைய 250 பேர் உள்ளிட்ட 20,000 பேருக்கு புலமைப்பரிசில் பெற தகுதி பெற்றுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

மார்ச் 31ஆம் திகதி வரைமீள் பரிசீலனைக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் மாவட்டங்களுக்கான சிங்கள மற்றும்  தமிழ்மொழி மூலமான பரீட்சாத்திகளுக்கான வெட்டுப் புள்ளிகள் வருமாறு:

வெட்டுப்புள்ளிகள்
மாவட்டம் சிங்கள மொழி
தமிழ் மொழி
1. கொழும்பு 152 149
2. கம்பஹா 152 149
3. களுத்துறை 152 149
4. கண்டி 152 149
5. மாத்தளை 152 149
6. நுவரெலியா 145 146
7. காலி 152 149
8. மாத்தறை 152 149
9. அம்பாந்தோட்டை 148 147
10. யாழ்ப்பாணம் - 148
11. கிளிநொச்சி - 148
12. மன்னார் - 148
13. வவுனியா 142 147
14. முல்லைத்தீவு 140 147
15. மட்டக்களப்பு - 147
16. அம்பாறை 145 147
17. திருகோணமலை 145 147
18. குருணாகல் 152 149
19. புத்தளம் 146 146
20. அநுராதபுரம் 146 147
21. பொலன்னறுவை 146 147
22. பதுளை 146 147
23. மொணராகலை 146 146
24. இரத்தினபுரி 148 145
25. கேகாலை 152 149

 

PDF File: 

Add new comment

Or log in with...