3 இலஞ்ச ஊழல் வழக்குகளிலிருந்து ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவர் விடுவிப்பு

3 இலஞ்ச ஊழல் வழக்குகளிலிருந்து ஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவர் விடுவிப்பு-Johnston Fernando & 2 Others Released from 3 Bribery Cases-Sathosa

கடந்த 2010 முதல் 2014ஆம் ஆண்டு வரை சதொச ஊழியர்களை அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியமை தொடர்பில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட மூவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பிலான மூன்று இலஞ்ச வழக்குகளில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கு இன்று (28) கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஶ்ரீ ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதவான் குறித்த உத்தரவை வழங்கினார்.

ஜோன்ஸ்டன் பெனாண்டோ 2010 - 2014 காலப்பகுதியில் அமைச்சராக கடமையாற்றிய போது லங்கா சதொச ஊழியர்கள் 153 பேரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு 40 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.


Add new comment

Or log in with...