- மேலும் 16 பேர் காயம்
ஹட்டன்-டிக்கோயா வீதியினூடாகப் பயணித்த தனியார் பஸ் ஒன்று விபதிற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (28) காலை 6.30 மணியளவில் வீதியை விட்டு விலகி குறித்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹட்டன் ஆடைத்தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
குறித்த பஸ் வீதியை விட்டு விலகி 45 அடி பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த பஸ்ஸில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, 16 பேர் காயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(நோட்டன் பிரிட்ஜ் நிருபர்)
Add new comment