பதுளைப் பகுதியின் வேவெஸ்ஸ பெருந்தோட்ட தெபத்தை தோட்டப் பிரிவிலிருந்து நேற்று (24) பெண் ஒருவரின் சடலமொன்றினை, பதுளைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
தெபத்தை தோட்டப் பிரிவைச் சேர்ந்த 58 வயது பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
பதுளை – பசறை பிரதான வழியின் 06 ஆம் மைல் அருகாமையிலுள்ள தெபத்தை தேயிலை மலையிலேயே, இச்சடலம் காணப்பட்டுள்ளது.
பெண்ணொருவரின் சடலம் தேயிலை மலையில் காணப்படுவதாக, பதுளைப் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கவே, பொலிஸார் விரைந்து சடலத்தை மீட்டனர். சடலம் தற்போது, பதுளை அரசினர் மருத்துவமனை பிரேத அறையில் சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு, கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என விசாரணைகளை மேற்கொண்டுள்ள பதுளைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், பல்வேறு கோணங்களில், இம்மரணம் குறித்து தீவிர புலன் விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(பதுளை தினகரன் விசேட நிருபர் - எம். செல்வராஜா)
Add new comment