- பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா
- 3 நாள் நிகழ்வு நாளையுடன் நிறைவு
2022 யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக சந்தையின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் யாழ் மாநகர திறந்தவெளிமைதானத்தில் இன்று (22) இடம்பெறுகின்றது.
வர்த்தக மன்றம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு,யாழ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம், யாழ் இந்திய உதவித் துணைத்தூதரகம் ஆகியவற்றின் எற்பாட்டில் 12ஆவது முறையாக இந்நிகழ்வு இடம்பெறுகின்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்துகொண்டு உத்தியபூர்வமாக சர்வதேச வர்த்தக சந்தையினை அங்குரார்ப்பண நாடாவை வெட்டி ஆரம்பித்து வைத்தார்.
குறிப்பாக 47 விற்பனைக் கூட நுகர்வோர் பொருட்களும், இதர உள்ளிட்ட பொருட்களும் உழவு இயந்திர வாகனம், நெல் அறுவடை இயந்திரம் உள்ளிட்ட பாகங்களின் வாகனங்களும் தொழில் முயற்சியினை தேடும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வழிகாட்டல் கூடாரங்களும் இதன்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் வர்த்தக மன்றம் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, யாழ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் யாழ் இந்திய உதவித் துணைத்தூதரகம் ஆகியவற்றின் துறைசார்ந்த அதிகாரிகள், ஒருங்கிணைப்பு குழுவினர்கள், வாடிக்கையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நேற்று (21) ஆரம்பமாகி 3 நாட்களாக இடம்பெறும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்த கண்காட்சி நாளையுடன் (23) நிறைவடைகின்றது.
Add new comment