மேல் மாகாணத்தில் டெங்கு அதிகரிப்பு

வருட ஆரம்பத்தில் 5000 பேர் பாதிப்பு

இவ்வருடம் ஜனவரி மாதத்தில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்திருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுதொடர்பாக

அப்பிரிவின் வைத்தியர் இந்திக வீரசிங்க , படிப்படியாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை காணக்கூடியதாக இருப்பதாக தெரிவித்தார்.

இதேவேளை கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக வைத்தியர் இந்திக வீரசிங்க சுட்டிக்காட்டினார்.

 


Add new comment

Or log in with...