- இலங்கை விமானப்படையினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுப்பூசி மையம்
வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு விமான நிலையத்தில் தடுப்பூசி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தினமும் 24 மணி நேரமும் (24x7) இயங்கும் கொவிட்-19 தடுப்பூசி மையத்தை இலங்கை விமானப்படை நிறுவியுள்ளதாக, இலங்கை விமானப்படை பேச்சாளர் குறூப் கெப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.
இவ்வாறு வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்கள் முதலாவது, இரண்டாவது அல்லது பூஸ்டர் தடுப்பூசி டோஸ்களை போட்டிருக்காத நிலையில், அவர்கள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள தடுப்பூசி மையத்தில் Pfizer தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியுமென, துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
Add new comment