பேருந்து விபத்தில் ஆறு பேர் காயம்

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் நேற்று (15)  மாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஆறு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த  இ.போ.ச பேருந்தும், அதேதிசையில் பயணித்த தனியார் பேருந்தும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் அரச பேருந்தில் பயணித்த 6 பயணிகள் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இரு பேருந்துகளும் பகுதியளவில் சேதமடைந்தன.  விபத்து தொடர்பாக பூவரசங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

(ஓமந்தை விஷேட நிருபர்)