பாகிஸ்தான் அணி இலகு வெற்றி

பங்களாதேஷுக்கு எதிராக சிட்டகொங்கில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

202 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி ஆட்டத்தின் கடைசி நாளான நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை இழந்து அந்த இலக்கை அடைந்தது.

இதன்போது ஆரம்ப விக்கெட்டுக்காக ஆபித் அலி மற்றும் அப்துல் ஷபீக் 151 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். அடுத்தடுத்து தனது இரண்டாவது சதத்தை பெறுவதை தவறவிட்ட ஆபித் அலி 91 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததோடு ஷபீக் 73 ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

முதல் இன்னிங்ஸில் 133 ஓட்டங்களை பெற்ற அலி கடந்த ஆறு ஆண்டுகளில் பாக் அணிக்கு டெஸ்ட் போட்டி ஒன்றில் இரு சதங்கள் பெற்றவராக பதிவாவதையே அவர் தவறவிட்டார். இதற்கு முன் 2014 இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மிஸ்பா உல் ஹக் இந்த சாதனையை படைத்திருந்தார்.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்காவின் செரே பங்ளா தேசிய அரங்கில் வரும் டிசம்பர் 4 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.