இலங்கையின் சேதன விவசாய மாற்றத்துக்கு பவர் நிறுவனத்திடமிருந்து குறுங்கால தீர்வுகள் பகிர்வு

இலங்கையின் விவசாயத் துறையில் புத்தாக்கமான தீர்வுகளை வழங்கும் பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரக் குழுமமான பவர் நிறுவனம் (A. Baur & Co. (Pvt.) Ltd.), நாட்டின் விவசாயத் துறைக்கு பாரம்பரிய உரப் பயன்பாட்டிலிருந்து சேதன உரப் பயன்பாட்டுக்கு வெற்றிகரமாக மாறுவதற்கு அவசியமான ஆரம்பகட்ட பிரதான உள்ளம்சங்கள் மற்றும் தீர்வுகளை, விஞ்ஞானபூர்வ ஆதாரம் மற்றும் அறிவினூடாக தனது நிபுணத்துவ மற்றும் பிரயோக அனுபவங்களைக் கொண்டு பகிர்ந்திருந்தது.

பவர் நிறுவனம் அதன் ஒப்பந்த நிறுவனங்களான Research Institute of Organic Agriculture (FiBL) மற்றும் School of Agricultural, Forest and Food Sciences (HAFL) ஆகியவற்றுடன் இணைந்து இலங்கையில் ஏற்பாடு செய்திருந்த நிபுணர் குழுவின் விஜயத்தின் போது கண்டறியப்பட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, பாரம்பரிய உரப் பயன்பாட்டு உற்பத்தியிலிருந்து சேதன உரப் பயன்பாட்டு உற்பத்திக் கட்டமைப்புக்கு குறுகிய காலப்பகுதியில் மாறிக் கொள்வதற்கு அவசியமான படிமுறைகளை விளக்கியிருந்தது.

இந்த அறிக்கையில் அசேதன உரத்தைப் பயன்படுத்தாமல் தாதுப்பொருட்கள் அடங்கிய சேதன உரத்தைப் பயன்படுத்தி விவசாயக் கட்டமைப்பை மாற்றுவது என்பது போதியளவு சேதன உரமின்மையால் பயனளிக்காது என்பதுடன், நிலத்தின் உயிரியல் அம்சங்களை மீளச் செயற்படுத்துவதன் முக்கியத்துவம் அடங்கலாக தற்போதைய மண்வளம் – தாவரக் கட்டமைப்பு என்பது தாதுப்பொருட்கள் அடங்கிய உரத்துக்கு பழக்கப்பட்டுள்ளதுடன், அவற்றினால் சேதன உரத்தை உடனடியாக அகத்துறிஞ்சலுக்கு பழக்கப்படுத்திக் கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாய நிலங்களில் பயன்படுத்துவதற்காக பெருமளவு மூலப் பொருட்கள் கொண்டு செல்லப்பட வேண்டிய தேவை காணப்படுவதும் குறிப்பிடப்பட்டுள்ளது.