அமெரிக்காவில் ரயில் தடம்புரண்டு மூவர் பலி: ஐம்பது பேருக்குக் காயம்

அமெரிக்காவின் மொன்டானா மாநிலத்தில் ரயில் தடம்புரண்ட விபத்தில் மூவர் கொல்லப்பட்டதோடு மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜொப்லின் சிறு நகருக்கு அருகில் உள்ளூர் நேரப்படி கடந்த சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் இந்த ரயிலின் பல ​ெபட்டிகளும் தடம்புரண்டன. சிக்காகோவில் இருந்து சியாட்டலை நோக்கி பயணித்த இந்த ரயிலில் சுமார் 141 பயணிகள் மற்றும் 16 ரயில் பணியாளர்கள் இருந்ததாக ரயில் சேவை தெரிவித்துள்ளது.

ரயில் பெட்டிகளில் சிக்கி இருக்கும் பயணிகளை வெளியேற்றுவதற்கு தீவிர மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இந்த ரயிலில் பல பெட்டிகள் ஒரு பக்கமாக சரிந்திருக்கும் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. பயணிகள் ரயிலின் ஓரமாக நின்றிருப்பதைம் சிலர் பயணப்பொதிகளுடன் இருப்பதையும் காணமுடிகிறது.

இந்த விபத்துக் குறித்து விசாரணை நடத்துவதற்கு விசாரணையாளர்கள் மற்றும் ரயில் சமிக்ைஞகள் பற்றிய நிபுணர்கள் உட்பட 14 பேர் கொண்ட குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பியதாக தேசிய போக்குவரத்து பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.