Wednesday, August 25, 2021 - 11:28am
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காங்கேயனோடை வாவி ஓரத்தில் மைக்ரோ ரக கைத்துப்பாக்கி ஒன்றுடன் தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.
நேற்றுமுன்தினம் (23) மாலை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் பேரில் குறித்த கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. பிஸ்டலுடன் 2 மெகசின்கள் மற்றும் 8 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Add new comment