- அவரது மனைவி உள்ளிட்ட சந்தேகநபர்களின் வி.மறியல் செப்டெம்பர் 06 வரை நீடிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த நிலையில் தீக்காயங்களுடன் மரணமடைந்த 16 வயது சிறுமி ஹிஷாலினி ஜூட் குமாரின் மரணம் தொடர்பான வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் 5ஆவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கு விசாரணை தொடர்பில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, ரிஷாட் பதியூதீன் எம்.பியின் மனைவி, மனைவியின் தந்தை, தரகர் உள்ளிட்டோருக்கு எதிர்வரும் செப்டெம்பர் 06 ஆம் திகதி வரை, மேலும் 14 நாட்களுக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்றையதினம் (23) கொழும்பு நீதவான் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது இவ்வுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
டயகமவைச் சேர்ந்த ஹிஷாலியின் மரணம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சிஹாப்தீன் ஆயிஷா (46), மொஹமட் சிஹாப்தீன் (70), சங்கர் என அழைக்கப்படும் பொன்னையா பண்டாரம் (64) ஆகியோர் கடந்த ஜூலை 23ஆம் திகதி பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
Add new comment