Friday, August 6, 2021 - 11:12am
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மூன்று எம்.பிக்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி எம்.பி. ரோஹண திஸாநாயக்க மற்றும் அம்பாந்தோட்டை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. திலிப் வெதஆரச்சி ஆகியோருக்கு இவ்வாறு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை பதுளை மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி எம்.பி. திஸ்ஸ குட்டியாரச்சிக்கும் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment