சர்வதேச போதைப்பொருள் கடத்தல்: இலங்கையர் ஒருவர் இந்தியாவில் கைது

சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுவருபவர் என்று கருதப்படும் இலங்கையர் ஒருவர் தமிழகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுரேஷ் ராஜன் என்ற 28 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை கேரளாவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 3 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், காஞ்சிபுரத்தில் வசித்து வந்த சுரேஷ் ராஜன் என்ற 28 வயதான இலங்கையர், கோயம்புத்தூர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர் விளக்கமறியல் உத்தரவின் அடிப்படையில் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சில ஆண்டுகளுக்கு முன்னர் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி இலங்கையிலிருந்து இந்தியாவிற்குப் பிரவேசித்திருந்தமை விசாரணையின்போது தெரியவந்துள்ளது.


Add new comment

Or log in with...