ஆளும் கட்சித்தலைவர்களின் கூட்டம் இன்று (19) முற்பகல் 10 மணிக்கு நடைபெறுகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் மாகாண சபை தேர்தல் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். மாகாண சபை தேர்தல் முறை தொடர்பில் கூட்டணி கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துகள் காணப்படும் நிலையில் இங்கு தீர்க்கமான முடிவு எட்டப்படலாம் எனவும் அறிய வருகிறது.
இதே வேளை சர்ச்சைக்குறிய கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு தொடர்பிலும் இங்கு முக்கியமாக ஆராயப்பட இருப்பதாக அறிய வருகிறது.
இதேவேளை ஆளும் கட்சி எம்.பிக்கள் கூட்டம் இன்று மாலை 6.30 மணியளவில் பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
Add new comment