வெளிநாடுகளில் தடுப்பூசி பெற்று நாடு திரும்புவோர் குறித்து கவனம்

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்களின் தனிமைப்படுத்தல் காலத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது. தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களை அடிப்படையாகக் கொண்டு இந்த மாற்றங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.  

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,  

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்களின் தனிமைப்படுத்தல் காலத்தில் வெகு விரைவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. வெளிநாடுகளில் இரு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டு 14நாட்களின் பின்னர் நாடு திரும்புபவர்கள் இருப்பார்களாயின் அவர்களை பி.சி.ஆர். பரிசோதனைகளின் பின்னர் வீடுகளுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.   

மேலும் இம்முறை சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல் பண்டிகைகளை கொண்டாட முயற்சித்தால் ஏதேனுமொரு முடிவை எடுக்க வேண்டியேற்படும். இது தொடர்பில் நிலைப்பாடுகள் காணப்பட்டால் அறியத்தருமாறு கொவிட்19தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது எனவு​ம் அவர் தெரிவித்துள்ளார்.  


Add new comment

Or log in with...