தொலைக்காட்சிப்பெட்டி திருடிய சந்தேக நபருக்கு விளக்கமறியல்

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தொலைக்காட்சிப் பெட்டி திருடிய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதவான் நேற்றுமுன்தினம் (2) உத்தரவிட்டார்.

சந்தேக நபர் சேருநுவர பகுதியில் வீட்டு உரிமையாளர்கள் திருமண வைபவமொன்றுக்கு சென்ற நிலையில் யன்னல் வழியாக புகுந்து ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான தொலைக்காட்சிப் பெட்டியை திருடியுள்ளதாகவும், வீட்டு உரிமையாளர் செய்த முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபரை வீடொன்றில் தொலைக்காட்சிப் பெட்டியுடன் மறைந்திருந்த நிலையில் கைது செய்ததாகவும் சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை பொலிஸார் மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

கந்தளாய் தினகரன் நிருபர்

 


Add new comment

Or log in with...