காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட நான்கு வீதிகள் நாளை (01) அதிகாலை 5.00 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.
கொவிட்-19 தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதான, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.
அதற்கமைய, மோதினார் ஒழுங்கை, கபூர் வீதி, சின்னதோனா வீதி, ரெலிகொம் வீதி, முதலாம் குறுக்கு தெரு என்பன நாளை அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.
இதன் மூலம் காத்தான்குடி முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த டிசம்பரம் 31ஆம் திகதி முதல் காத்தான்குடி பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 21ஆம் திகதி காத்தான்குடியின் 8 கிராம அலுவலர் பிரிவுகளும், அதன் பின்னர், 40 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் கடந்த பெப்ரவரி 09ஆம் திகதியும் என, இரண்டு கட்டங்களாக விடுவிக்கப்பட்ட நிலையில், 4 வீதிகள் மாத்திரம் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது, குறித்த 4 வீதிகளும் நாளை (01) அதிகாலை 5.00 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)
Add new comment