யாழ். சிறைச்சாலையில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று

யாழ். சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகள் நால்வருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்தோடு வடக்கு மாகாணத்தில் மேலும் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்ட 431 பேரின் பி.சி.ஆர். பரிசோதனையிலேயே 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மற்றைய மூவரும் மல்லாவியில் இறுதிச் சடங்கு ஒன்றுக்கு புத்தளத்திலிருந்து வருகை தந்தவர்கள் என மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். விசேட நிருபர்


Add new comment

Or log in with...