Tuesday, February 23, 2021 - 12:22pm
பணத்தை பந்தயமாக வைத்து மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி போட்டிகளை ஏற்பாடு செய்த 15 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணியளவில் பியகம - சியம்பலாபே பிரதேசத்தில் இவர்கள் இப் போட்டியை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இணையத்தளத்தினுாடாக தொடர்புகொண்டு இதனை ஏற்பாடு செய்துள்ளதாக மேலதிக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இவர்களிடமிருந்த 06 மோட்டார் சைக்கிள் மற்றும் 03 முச்சக்கர வண்டிகளை பியகம பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
தென்பகுதி தினகரன் நிருபர்
Add new comment