தனியார் தொலைக்காட்சியிடமும் வாக்குமூலம் பெற வேண்டும்

தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆர். சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் தளத்தின் ஊடாக அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

“ஒரு நாடு, இரண்டு சட்டம்” என கூறுகின்றார்கள். ஆனால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வெற்றியீட்டிய வெற்றியாளருக்கு வரவேற்பளிக்கும் பேரணியொன்று அஹுங்கல்ல பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வின் வீடியோவை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு, ஆர்.சாணக்கியன் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த பேரணியை தடுத்து நிறுத்துவதற்கு ஏன் பொலிசார் நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொள்ளவில்லை.


Add new comment

Or log in with...