Tuesday, January 26, 2021 - 11:26am
ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான சமிந்த விஜேசிறி மற்றும் ஹேஷ விதானகே ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனை அடுத்து அவருடன் நெருங்கிய தொடர்புடைய குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வசந்த பண்டார எம்.பிக்கு கொரோனா தொற்றியது நேற்று உறுதியானது.
Add new comment