தேவையான பொருட்கள்
இஞ்சி - 1கப்
கிராம்பு, பட்டை - 10
அன்னாசிப்பூ - - 5
ஏலக்காய் - 5கிராம்
துளசி - ஒரு கைப்பிடி
மிளகு - 5கிராம்
அதிமதுரம் -2தே. கரண்டி
அஸ்வகந்தா - 1/4ஸ்பூன்
செய்முறை
இஞ்சியை தோல் சீவி தண்ணீரில் நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பிறகு அதை வெயிலில் தண்ணீர் உலரும் வரை காய வைக்கவும். துளசியையும் தண்ணீரில் கழுவி அதையும் நன்றாக வெயிலில் உலர விட வேண்டும்.
பின்னர் அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் மிளகு மற்றும் ஏலக்காயை சேர்த்து வறுக்கவும்.
பின்பு அதில் வெயிலில் உலர்ந்த இஞ்சி, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும். வறுத்த கலவையை ஆறவைத்து மிக்சியில் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும்.
அரைத்த பொடியில் அதிமதுரம் மற்றும் அஸ்வகந்தா பொடியை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை தினமும் காலையில் தேநீரில் கலந்து குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பதால் உடலுக்கு எவ்வித நோயும் அண்டாது.
Add new comment