கொழும்பு, கம்பஹாவில் ஒரு சில பிரதேசங்கள் விடுவிப்பு

கொழும்பு, கம்பஹாவில் ஒரு சில பிரதேசங்கள் விடுவிப்பு-Some of the Areas in Colombo Gampaha and Kalutara Lifted Isolation-Newly Lockdown

- நாளை அதிகாலை 5.00 மணி முதல் ஒரு சில பகுதிகள் விடுவிப்பு
- சில பகுதிகள் புதிதாக தனிமைப்படுத்தல்
- சில பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில்‌ குறிப்பிட்ட சில பிரதேசங்களில்‌ அமுல்படுத்தப்பட்ட  தனிமைப்படுத்தல் நிலை நாளை (21) அதிகாலை 5.00 மணி முதல் நீக்கப்பட்டுள்ளதோடு, ஒரு சில பிரதேசங்களில் புதிதாக தனிமைப்படுத்தல் நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பின் மருதானை, தெமட்டகொடை, மாளிகாவத்தை, கொட்டாஞ்சேனை உள்ளிட்ட 9 பொலிஸ் பிரிவுகள் உள்ளிட்ட சில பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளன.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட ஏனைய பகுதிகள் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகள், மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என, ஷவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், கொவிட்‌-19 பரவலைத்‌ தடுக்கும்‌ தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின்‌ பிரதானி, இராணுவத்‌ தளபதி லெப்டினன்‌ ஜெனரல்‌ ஷவேந்திர சில்வா விடுத்துள்ள அறிவித்தல் வருமாறு,

கொழும்பு மாவட்டம்
தொடர்ந்தும் தனிமைப்படுத்தபடும் பொலிஸ் பிரிவுகள்

  • மருதானை
  • மாளிகாவத்தை
  • தெமட்டகொடை
  • கிராண்ட்பாஸ்
  • மோதறை (முகத்துவாரம்‌)
  • கொட்டாஞ்சேனை
  • ஆட்டுப்பட்டித்தெரு
  • டாம் வீதி
  • வாழைத்தோட்டம்

கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்

  • கொம்பனித்தெரு: வேகந்த
  • பொரளை: வனாத்தமுல்ல
  • கொம்பனித்தெரு:‌ ஹுணுப்பிட்டி
  • கறுவாத்தோட்டம்‌: 60ஆவது தோட்டம்
  • வெள்ளவத்தை பொலிஸ்‌ பிரிவில்‌: மயூரா பிளேஸ்‌
  • வெள்ளவத்தை பொலிஸ்‌ பிரிவில்‌: நபீர் வத்தை
  • மிரிஹான பொலிஸ் பிரிவில்: தெமலவத்த‌

அடுக்குமாடித் தொடர்கள்:

  • வெல்லம்பிட்டி: லக்சந்த செவன
  • மட்டக்குளி: ரன்திய உயன, பெர்குசன் வீதி தெற்கு பகுதி

நாளை (21) மு.ப. 5.00 மணி முதல் விடுவிக்கப்படும் பிரதேசங்கள்:

  • வெல்லம்பிட்டி: சாலமுல்ல கிராமசேவகர் பிரிவு
  • வெள்ளவத்தை:‌ கோகிலா வீதி

குடியிருப்பு தொகுதிகள்

  • கிராண்ட்பாஸ்‌: சிறிசந்த செவன, சிறிமுத்து உயன
  • மாளிகாவத்தை : லக்ஹிரு செவன புகையிரத தொடர்மாடி
  • பொரளை : சிறிசர உயன

நாளை (21) மு.ப. 5.00 மணி முதல் புதிதாக தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்:
(எவ்வித பிரதேசங்களும் புதிதாக தனிமைப்படுத்தப்படவில்லை)

கம்பஹா மாவட்டம்
நாளை (21) மு.ப. 5.00 மணி முதல் விடுவிக்கப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்:
வத்தளை பொலிஸ் பிரிவு

  • கெரவலப்பிட்டி:  நைதுவ பிரதேசம்

பேலியகொடை பொலிஸ் பிரிவு

  • பேலியகொட கங்கபட

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவு

  • விலேகொட வடக்கு

தொடர்ந்தும் தனிமைப்படுத்தபடும் கிராமசேவகர் பிரிவுகள்

  • வத்தளை பொலிஸ் பிரிவு
  • வெலிகடமுல்ல : துவே வத்தை பிரதேசம்‌

பேலியகொடை பொலிஸ்‌ பிரிவு

  • பேலியகொடவத்தை
  • மீகஹவத்த
  • பட்டிய வடக்கு

கிரிபத்கொடை பொலிஸ்‌ பிரிவில்‌

  • ஹுணுப்பிட்டி வடக்கு : வெதிகந்த பிரதேசம்

நீர்கொழும்பு பொலிஸ்‌ பிரிவு

  • தல்துவ: MC குடியிருப்புத் திட்டம்

நிட்டம்புவ பொலிஸ்‌ பிரிவில்‌

  • திஹாரி வடக்கு மற்றும் திஹாரி கிழக்கில்: வாரண பன்சல வீதி, கத்தொட்ட வீதி, ஹிஜ்ரா மாவத்தையினுள் நுழையும் பகுதிகள்

வியாங்கொடை பொலிஸ்‌ பிரிவு

  • ஹிரிபிட்டிய தெற்கு: நிதஹஸ்‌ மாவத்தை

பூகொடை பொலிஸ் பிரிவு

  • குமாரிமுல்ல

நாளை (21) மு.ப. 5.00 மணி முதல் புதிதாக தனிமைப்படுத்தப்படும் பிரதேசங்கள்/ கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்:

பேலியகொடை பொலிஸ்‌ பிரிவு
பேலியகொடை கங்கபட: நெல்லிகஹவத்த, பூரணகொட்டு வத்த

கிரிபத்கொடை பொலிஸ் பிரிவு
விலேகொட வடக்கு: ஶ்ரீ ஜயந்தி மாவத்தை

PDF File: 

Add new comment

Or log in with...