தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகள் இன்று முதல் ஆரம்பம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் இன்று முதல் அவர்களின் பணிகளை ஆரம்பிக்கவுள்ளனர் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக நிமல் ஜீ புஞ்சிஹேவா நியமிக்கப்பட்டுள்ளதோடு எம். எம். மொஹம்மட் , எஸ். பி. திவாரத்ன, கே. பி. பி. பத்திரண, மற்றும் ஜீவன் தியாகராஜா ஆகியோர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதற்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக கடமையாற்றிய மஹிந்த தேசப்பிரிய ஓய்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...