Saturday, November 28, 2020 - 5:19pm
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக பத்தரமுல்லை, பெலவத்த, அக்குரேகொட ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இன்று இரவு 9 மணி முதல் 12 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என்பதோடு, குறித்த பகுதிகளுக்கு நாளை (29) காலை 9.00 மணிக்கு மீண்டும் நீர் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக, சபை தெரிவித்துள்ளது.
Add new comment