Thursday, November 26, 2020 - 6:00am
அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கைதிகள் சிலர் கூரை மீதேறி நேற்று முன்தினம் ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை நேற்றும் தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கைதிகள் சிலரை தனிமைப்படுத்துவதற்காக குறித்த சிறைச்சாலைக்கு அழைத்து வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக சிறைச்சாலையை சுற்றி விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
Add new comment