எல்.பீ.எல் தொடரில் ஆட டெல் ஸ்டெயின் விருப்பம்

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான டேல் ஸ்டெய்ன் லங்கா ப்ரீமியர் லீக் தொடரில், கண்டி டஸ்கர்ஸ் அணிக்கு விளையாட விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கண்டி டஸ்கர்ஸ் அணி வீரர்கள் ஏலத்தில் வாங்கியிருந்த வேகப் பந்துவீச்சாளர்களான வஹாப் ரியாஸ், லியம் பிளங்கட் ஆகியோர் வெவ்வேறு காரணங்களினால் இந்தத் தொடரிலிருந்து விலகினர். 

அதனையடுத்து இந்த வீரர்களுக்கு பதிலாக கண்டி டஸ்கர்ஸ் அணி தமது குழாத்தில் பாகிஸ்தானின் வேகப் பந்துவீச்சாளர் சொஹைல் தன்வீரினையும், இந்தியாவின் முனாப் பட்டேலினையும் இணைத்தது. எனினும், இந்த வீரர்களில் கடந்த வாரம் இலங்கை வந்த சொஹைல் தன்வீருக்கு கொவிட் – 19 தொற்று உறுதியானது. இதனால் அவர் எல்.பீ.எல் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் உருவாகியுள்ளது.  

இவ்வாறான நிலையில் கொவிட் தொற்று ஏற்பட்ட சொஹைல் தன்வீருக்குப் பதிலாகவே கண்டி டஸ்கர்ஸ் அணியினர் டேல் ஸ்டெயினை தமது வீரர்கள் குழாத்தில் இணைப்பதற்கு பேச்சு வார்த்தைகள் நடாத்தி அதில் வெற்றி கண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.  

அனைத்து விடயங்களும் சரியாகும் பட்சத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் ஸ்டெயின் இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

லங்கா ப்ரீமியர் லீக் தொடர் எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.


Add new comment

Or log in with...