கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகள் விடுவிப்பு

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகள் விடுவிப்பு-Some of the Police Areas in Colombo-Gampaha-Kalutara District Removed

- பல பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்
- பண்டாரகமவில் ஒரு சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் உடன் அமுல்

கொவிட்-19 பரவல் நிலையை கருத்திற் கொண்டு, மேல் மாகாணத்திலுள்ள, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் அவசியத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த ஒரு சில பகுதிகள் நாளை (23) அதிகாலை 5.00 மணி முதல் விடுவிக்கப்படுவதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டம்
விடுவிக்கப்படும் பொலிஸ் பிரிவுகள்

  • பொரளை
  • வெல்லம்பிட்டி
  • கொழும்பு கோட்டை
  • கொம்பனித்தெரு

ஆயினும் பொரளை பொலிஸ் பிரிவில் வனாத்தமுல்ல கிராமசேவகர் பிரிவு, கொம்பனித்தெரு பொலிஸ்பிரிவில் வேகந்த கிராம சேவகர் பிரிவு ஆகியன மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும்.

13 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்...

  • மட்டக்குளி
  • மோதறை
  • ப்ளூமெண்டல்
  • கொட்டாஞ்சேனை
  • கிராண்ட்பாஸ்
  • கரையோரம்
  • ஆட்டுப்பட்டித்தெரு
  • மாளிகாவத்தை
  • தெமட்டகொடை
  • வாழைத்தோட்டம்
  • மருதானை
  • புறக்கோட்டை
  • டாம் வீதி

கம்பஹா மாவட்டம்
நாளை (23) அதிகாலை 5.00 மணிக்கு விடுவிக்கப்படும் பொலிஸ் பிரிவுகள்

  • ஜா-எல
  • கடவத்தை

5 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்...

  • நீர்கொழும்பு
  • ராகமை
  • வத்தளை
  • பேலியகொடை
  • களனி

களுத்துறை மாவட்டம்
உடன் அமுலாகும் வகையில் பண்டாரகம பொலிஸ் பிரிவிலுள்ள பின்வரும் கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்...

  • போகஹவத்த கிராம சேவகர் பிரிவு
  • பமுணுமுல்ல (முஸ்லிம்) கிராம சேவகர் பிரிவு (659C)
  • கிரிமன்துடாவ கிராம சேவகர் பிரிவு
  • கோராவல கிராம சேவகர் பிரிவு
  • அட்டுளுகம மேற்கு கிராம சேவகர் பிரிவு
  • கலகஹமணடிய கிராம சேவகர் பிரிவு
  • பமுணுமுல்ல கிராம சேவகர் பிரிவு (660)

PDF File: 

Add new comment

Or log in with...