- பல பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்
- பண்டாரகமவில் ஒரு சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் உடன் அமுல்
கொவிட்-19 பரவல் நிலையை கருத்திற் கொண்டு, மேல் மாகாணத்திலுள்ள, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் அவசியத்தின் அடிப்படையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த ஒரு சில பகுதிகள் நாளை (23) அதிகாலை 5.00 மணி முதல் விடுவிக்கப்படுவதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டம்
விடுவிக்கப்படும் பொலிஸ் பிரிவுகள்
- பொரளை
- வெல்லம்பிட்டி
- கொழும்பு கோட்டை
- கொம்பனித்தெரு
ஆயினும் பொரளை பொலிஸ் பிரிவில் வனாத்தமுல்ல கிராமசேவகர் பிரிவு, கொம்பனித்தெரு பொலிஸ்பிரிவில் வேகந்த கிராம சேவகர் பிரிவு ஆகியன மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் இருக்கும்.
13 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்...
- மட்டக்குளி
- மோதறை
- ப்ளூமெண்டல்
- கொட்டாஞ்சேனை
- கிராண்ட்பாஸ்
- கரையோரம்
- ஆட்டுப்பட்டித்தெரு
- மாளிகாவத்தை
- தெமட்டகொடை
- வாழைத்தோட்டம்
- மருதானை
- புறக்கோட்டை
- டாம் வீதி
கம்பஹா மாவட்டம்
நாளை (23) அதிகாலை 5.00 மணிக்கு விடுவிக்கப்படும் பொலிஸ் பிரிவுகள்
- ஜா-எல
- கடவத்தை
5 பொலிஸ் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில்...
- நீர்கொழும்பு
- ராகமை
- வத்தளை
- பேலியகொடை
- களனி
களுத்துறை மாவட்டம்
உடன் அமுலாகும் வகையில் பண்டாரகம பொலிஸ் பிரிவிலுள்ள பின்வரும் கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்...
- போகஹவத்த கிராம சேவகர் பிரிவு
- பமுணுமுல்ல (முஸ்லிம்) கிராம சேவகர் பிரிவு (659C)
- கிரிமன்துடாவ கிராம சேவகர் பிரிவு
- கோராவல கிராம சேவகர் பிரிவு
- அட்டுளுகம மேற்கு கிராம சேவகர் பிரிவு
- கலகஹமணடிய கிராம சேவகர் பிரிவு
- பமுணுமுல்ல கிராம சேவகர் பிரிவு (660)
Add new comment