கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் ஹட்டன், டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களை தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கும் நடவடிக்கை இன்று (31) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஹட்டனிலிருந்து போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு இத்தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டுள்ளன.
ஹட்டன், டிக்கோயா நகர சபையின் வழிகாட்டலில் இத்தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டன.
இப்பணிகள் ஹட்டன் பிரதான பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஹட்டன், டிக்கோயா நகரசபையின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இத்தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கும் நடவடிக்கையின்போது ஹட்டனிலிருந்து சேவையில் ஈடுபடும் அரச, தனியார் பஸ்கள், முச்சக்கரவண்டிகளுக்கு தொற்று நீக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டன.
(ஹட்டன் சுழற்சி நிருபர் - ஜி.கே. கிருஷாந்தன்)
Add new comment