குச்சவெளியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட நால்வருக்கு வி.மறியல்

குச்சவெளி பொலிஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட நால்வரை எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டார்.

இச்சந்தேகநபர்களை நேற்று (29) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோதே, குறித்த விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ஜாயா நகர், குச்சவெளி பகுதியைச் சேர்ந்த 23, 26, 21, 20 வயதுடைய நால்வரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இச்சந்தேக நபர்கள், புல்மோட்டை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் டைனமைட்டை பாவித்து மீன் பிடியில் ஈடுபட்டபோது, கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக, குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களிடம் சட்டவிரோதமான முறையில் பிடித்த 200 கிலோகிராம் மீன்களைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

(கந்தளாய் தினகரன்  நிருபர் - எப்.முபாரக்)


Add new comment

Or log in with...