Thursday, October 29, 2020 - 9:04am
இன்று (29) காலை 17 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்துள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, KU 264 எனும் விமானம் மூலம் அபுதாபியிலிருந்து 5 பேரும், QR 668 எனும் விமானம் மூலம் கட்டாரிலிருந்து 12 பேரும் என, 17 பேர் இவ்வாறு இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு நாடு திரும்பிய அனைவரும், முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
Add new comment