பரீட்சை விடைத்தாள் திருத்திக் கொண்டிருந்த ஆசிரியர் மரணம்

அண்மையில் இடம்பெற்று  முடிந்த புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (26) இடம்பெற்றுள்ளது.

2ஆம் குறுக்கு, திருச்செந்தூர், கல்லடியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை ரவீந்திரன் (52) எனும் ஆசிரியரே  திடீரென மயக்கமுற்று மரணமடைந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஆனைப்பந்தி வித்தியாலயத்தில்  புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவானின் உத்தரவிற்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற காத்தான்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன் சடலத்தை பார்வையிட்ட பின்னர், சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பணித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(மணல்சேனை நிருபர் - நடனசபேசன் சாமித்தம்பி)


Add new comment

Or log in with...