அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் மறு அறிவித்தல் வரை பூட்டு

அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் மறு அறிவித்தல் வரை பூட்டு-All Museums Under the Central Cultural Funds Closed Until Further Notice

மத்திய கலாசார நிதியத்தின் கீழுள்ள அனைத்து அருங்காட்சியகங்களும் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நிலையை கருத்திற் கொண்டு குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, புத்த சாசன, மத விவகார மற்றம் கலாசார மற்றும் நிதியமைச்சின் கீழுள்ள, மத்திய கலாசார நிதியம் இதனை அறிவித்துள்ளது.

அதற்கமைய, பொலன்னறுவை, சிகிரியா, கதிர்காமம், காலி, கண்டி பிரதான மத்திய கலாசார நிதியங்களின் நிர்வாகத்தின் கீழுள்ள, நாட்டின் அனைத்து அங்காட்சியகங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...